districts

பழங்குடியின குடும்பத்திற்கு சாதிச் சான்று வழங்க கள ஆய்வு

மயிலாடுதுறை, அக்.20 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம்  அளக்குடி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி யின (மலை குறவர்) சமூகத்தை சேர்ந்த  குடும்பத்தினருக்கு சாதிச் சான்று வழங்கு வது குறித்த கள ஆய்வு நடைபெற்றது.

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 4 குடும் பங்கள் வசித்து வருகின்றன. அக்குடும்பங் களில் உள்ள 8 குழந்தைகள், 5 முதல் 8 ஆம்  வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலை யில், தங்கள் பள்ளிப் படிப்புக்காக சாதிச் சான்று வழங்க வேண்டுமென கோரி மனு கொடுத்தனர்.

இதனால், அவர்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்ற சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர் பாபு கள விசாரணை செய்தார். அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பூர்வீகம், குலதெய்வ வழிபாடு, தொழில், பழக்கவழக்கங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார். அப்போது, “நான்கு குடும்பங் களும் இந்து மலை குறவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், இவர் களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிட வரு வாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்து,  சாதிச் சான்று பெற்றுத் தரப்படும்” என உறுதி யளித்தார். 

விசாரணையின் போது, மாதானம் சரக  வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கிராம நிர்வாக அலுவலர்கள் மதியழகன், வெங்க டேசன் மற்றும் கிராம உதவியாளர் ரமா ஆகி யோர் உடனிருந்தனர்.